logo
தந்தை செந்தமிழன் உடலுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

தந்தை செந்தமிழன் உடலுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

14/May/2021 11:17:08

சிவகங்கை, மே: இளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தில் காலமான தனது தந்தை செபஸ்தியான் என்ற செந்தமிழன் உடலுக்கு அவரது மகன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

 சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூர் கிராமம். இங்கு அவரது தந்தை செபஸ்தியான் என்ற செந்தமிழன்(90) வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வந்த இவர் கடந்த வியாழக்கிழமை மாலை காலமானார்.

இது குறித்து தகவல் சீமானுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சீமான் இரவு அரணையூர் கிராமத்திற்கு விரைந்து வந்தார். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கலங்கி  அஞ்சலி செலுத்தினார்.

சீமானின் தந்தை மறைவுக்கு  தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் சீமானை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

Top