13/May/2021 08:30:50
சென்னை: தமிழகத்தில் புதிதாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 853 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 17,442 ஆண்கள், 12,913 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 355 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 40 லட்சத்து 03 ஆயிரத்து 069 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 195 ஆண்களும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 631 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 162 பேரும், தனியார் மருத்துவமனையில்
131 பேரும் என 293 பேர் சிகிச்சை பலனின்றி
இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரத்து 471 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,508 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 12 லட்சத்து 79 ஆயிரத்து 658 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1 லட்சத்து 72 ஆயிரத்து 735 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.