logo
சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ. 5 கோடி முதல்வர் நிவாரண நிதி வழங்கல்

சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ. 5 கோடி முதல்வர் நிவாரண நிதி வழங்கல்

16/May/2021 10:31:25

ஈரோடு: சக்தி மசாலா நிறுவனம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 இது குறித்து சக்திமசாலா நிறுவனம் வெளியிட்ட தகவல்: ஈரோட்டில்  உள்ள  சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறதுகொரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும் , பல்வேறு  நிவாரணப் பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டார்கள். இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம்  பல்வேறு கொரோனா நிவரண பணிகளில் தொடர்ந்து  ஈடுபட்டு வருகிறது.


தமிழகத்தில் கொரோனா பேரிடர் எதிர்கொள்ள நிவாரண நிதியாக அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக  முதல்வர் ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மே.15 -ம் தேதி வங்கி  மூலம்  அனுப்பி வைக்கப்பட்டது இது குறித்து  முதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.

 தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள், எம்எல்ஏ- கள், சுகாதாரம், வருவாய் துறை, காவல்துறை, உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சி துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள்களப்பணியாற்றி வரும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்.

தன்னார்வலர்கள்தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு. பகலாக  ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை சக்தி மசாலா நிறுவனம் சார்பில் வணக்கத்தையும், பாராட்டும், நன்றியும் தெரிவித்து  கொள்வதாகவும் விரைவில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை  வேண்டுவதாகவும்  சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பி.சி துரைசாமி. சாந்தி துரைசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

Top