logo
கடம்பூர் அருகே கஞ்சா  வியாபாரி கைது: 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கடம்பூர் அருகே கஞ்சா வியாபாரி கைது: 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

27/Apr/2021 09:12:24

ஈரோடு ஏப்: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 2.5 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்த போலீஸார் தொடர்புடைய ஒரு நபரைக்  கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாக்கம்பாளையத்திலிருந்து குன்றி செல்லும் சாலையில் மாகாளியம்மன் கோவில் அருகே பதிவு எண இல்லாத இருசக்கர வாகனத்தில்  வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் 2.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகளை  மறைத்து வைத்து விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

உடனடியாக அவரிடமிருந்த  கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரனை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர்  குமார்(31) என்பதும்  குன்றி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கஞ்சாவை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் மறைத்து எடுத்து வந்த குமார் மீது வழக்கு பதிவு செய்த கடம்பூர் போலீசார் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறைக்கு  அனுப்பி வைத்தனர்.

Top