logo

ஈரோட்டில் நண்பரை தாக்கிய பேருந்து ஓட்டுனர் கைது

19/Jun/2021 04:33:14

ஈரோடு, ஜூன் ஈரோட்டில் நண்பரை கட்டையால் தாக்கிய  பேருந்து  ஓட்டுனரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு  வீரப்பன் சத்திரம் பிரசாத் வீதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் பூபாலன்(23).  பேருந்து ஓட்டுனரான இவர்  ஊரடங்கு காரணமாக பூபாலன் அருகில் உள்ள மில்லிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார். பூபாலன் கடந்த 17-ஆம் தேதி இவரது நண்பர் பழனிக்குமாரின் இரு சக்கர வாகனத்தில் மில்லுக்கு வேலைக்கு சென்றார்.

வேலை முடித்து வந்து பார்த்தபோது பூபாலன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை. அக்கம்பக்கம் விசாரித்தபோது, பூபாலனின் மற்றொரு நண்பரான  பேருந்து ஓட்டுனர்  கோபிநாத்(24) என்பவா் எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து  மாணிக்கம்பாளையம் சக்தி நகருக்கு சென்ற பூபாலன் கோபிநாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்இதில் , ஆத்திரம் அடைந்த கோபிநாத் தகாத வார்த்தையால் பேசியதுடன் கீழே கிடந்த கட்டையால் பூபாலனை தாக்கியுள்ளார்.

காயம் அடைந்த பூபாலன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின் பேரில்  ஈரோடு வடக்கு  காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து கோபிநாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Top