logo
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பார்சல்களில் உணவு வினியோகம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பார்சல்களில் உணவு வினியோகம்

25/Apr/2021 04:44:24

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பார்சல்களில் உணவு வினியோகம் நடைபெற்றது.

 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கு பிறப்பித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கம் போல் அம்மா உணவகங்கள், உணவகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மாநகர் பகுதியில் மட்டும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. காந்திஜி ரோடு, சின்ன மார்க்கெட் பகுதி, சூளை, சூரம்பட்டி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, கொல்லம்பாளையம் உட்பட 13 இடங்களில் அம்மா உணவகங்கள் இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டு இருந்தது.தற்போது கொரோனா தாக்கம் காரணமாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

 மாறாக பார்சல் மட்டும் உணவு வினியோகம் செய்யப்பட்டது. முதியவர்கள், வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் இளைஞர்கள் காலை அம்மா உணவகங்களில் வந்து பாத்திரங்கள் மூலம் உணவுகளை வாங்கி சென்றனர். அவர்கள் உணவகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வாசலில் உணவக ஊழியர்கள் நின்று பார்சலில் உணவுகள் வாங்கினர்.அம்மா உணவகங்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் மற்ற உணவகங்களும் வழக்கம்போல் இயங்கினாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பார்சலில் மட்டும் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி முதல் வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் உணவுகள் பார்சலில் மட்டும் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று முழு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான உணவகங்கள் திறக்க வில்லை. குறிப்பிட்ட சில உணவகங்கள் மட்டும் திறந்திருந்தன. அதில் பார்சலில்  மட்டும் உணவுகள் வழங்கப்பட்டன.

Top