25/Apr/2021 09:10:48
ஈரோடு ஏப்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தபோதும் போதிய விற்பனை விலை கிடைக்காததால் வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வாரம் தோறும் சனி,ஞாயிறு கிழமைகளில் கால்நடை சந்தைகளும் திங்கள்கிழமை மளிகை,காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து ள்ளதால் சனிக்கிழமை அந்தியூர் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது.
பெரும்பாலான மாடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால் கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகளின் விலை 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை குறைவாக வே விற்பனையானது. இதனால் அதிகளவில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த வியா பாரிகள் விலை குறைவு காரணமாக வேதனையடைந்தனர்.