logo
ஈரோட்டில் 3-ஆவது நாளாக  ஊரடங்கை மீறியதாக 100 வழக்குகள் பதிவு: போலீஸார் நடவடிக்கை

ஈரோட்டில் 3-ஆவது நாளாக ஊரடங்கை மீறியதாக 100 வழக்குகள் பதிவு: போலீஸார் நடவடிக்கை

23/Apr/2021 06:22:26

ஈரோடு, ஏப்: ஈரோட்டில் 3-ஆவது நாளாக  ஊரடங்கை மீறியதாக காவல்துறை சார்பில்  100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கின் போது மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகள் மற்றும் 34 முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி தங்கதுரை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதில் விதிமுறைகளை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடமாடுவோர்கடையை திறந்து வைத்திருந்த உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரவு நேர ஊரடங்கின்  முதல் நாளில் ஈரோடு மாவட்டத்தில் 50 வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2-ஆம்  நாள் ஊரடங்கில் 75 வழக்கங்களும்மூன்றாம் நாள் ஊரடங்கில் விதிமுறைகளை மீறியதாக 100 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று நாட்களில் 225 வாக்குகள் பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Top