logo
தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

21/Apr/2021 08:55:21

ஈரோடு,ஏப்: ஈரோடு சத்தியமங்கலம் அருகே தக்காளி பாரம் ஏற்றி வந்த பிக்கப் வேன்  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. சுமார் 200 கிலோ தக்காளி  கீழே கொட்டி சேதமடைந்தது.

கர்நாடக மாநிலம் சிக்கோலா பகுதியிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு திம்பம் மலைப்பாதை வழியாக தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு பிக்கப் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் கிராமம் அருகே வேன் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.‌

இதில் சுமார் 200 கிலோ தக்காளிகள் சேதமடைந்தன. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் கிரேன் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Top