19/Apr/2021 07:17:33
ஈரோடு ஏப்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தனியார் மகளிர் கலைக்கல்லூரிஈரோடு சிலம்பம் கமிட்டி மற்றும் நோபல் உலக சாதனை நிறுவனத்துடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர்.
இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிலம்ப மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளனர். இச்சாதனையை நோபல் சாதனை புத்தகத்தின் முகமது செராஜ் அன்சாரி அங்கிகரித்து சான்று வழங்கினார்.
இந்நிகழ்வில் கோபிசெட்டிபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர் செல்வம் ,தனியார் மகளிர் கலைக்கல்லூரி ஜெகதா லட்சுமணன், தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சந்தோஷ்குமார், தேசிய சிலம்பம் கமிட்டி தியாகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.