logo
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி  பொதுமக்கள் வழிபட்டனர்

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பொதுமக்கள் வழிபட்டனர்

09/Apr/2021 10:33:13

ஈரோடு, ஏப்:  ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி  பொதுமக்கள் வழிபட்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோயில்களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. 

இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை  பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று வெயிலையும் பொருட்படுத்தாமல் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு சென்றனர். 

அம்மனை வழிபட வரிசையில்  வந்து நின்ற மக்கள் முக கவசம் அணிந்து அம்மனை வழிபட்டனர்.இதேபோல் காரைவாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.

Top