logo
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு  கொரோனா தொற்று

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று

09/Apr/2021 06:16:10

ஈரோடு, ஏப்:  பெருந்துறை தொகுதி அதிமுக வேட் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் எஸ்.ஜெயக்குமார் (42). சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட ஜெயக்குமார், வாக்குப்பதிவு நடந்த 6-ஆம் தேதிய பொன்முடி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குப் பதிவினைப் பார்வையிட் டார் இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து மருத்துவ பரிசோத னையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

Top