17/Feb/2021 07:58:21
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை கிளையும் இணைந்து சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகனங்களில் உள்ள முகப்பு விளக்கு தடுப்பு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வெளியீடு ஆகிய நிகழ்வுகளை நடத்தினர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம்
அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின்
தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். சங்கத்தின்
முன்னாள் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஓவியர் சித்ரகலா ரவி, கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை கிளையின்
பொறியாளர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கையை
வெளியிட்டு பேசினார். புதுக்கோட்டை அரசு ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் ஆய்வாளர்
முத்துக்குமார் கௌரவ
விருந்தினராக கலந்துகொண்டு சாலையில் எவ்வாறு விபத்துகள்
ஏற்படுகின்றன அதனை எவ்விதமாக தடுக்கலாம் என்று
சாலை பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
பின்னர் சாலை வழியாக சென்ற அனைத்து வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் அனைவரிடமும் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜிஎஸ்எம்.சிவாஜி, அகிலா சுரேஷ்ராஜன் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகளும், அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகளும் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் கோபிநாத் நன்றி கூறினார்