logo
ஈரோடு அருகே மின்சார வாரிய ஊழியரின் வீட்டில் ரூ.2.10 லட்சம் திருட்டு

ஈரோடு அருகே மின்சார வாரிய ஊழியரின் வீட்டில் ரூ.2.10 லட்சம் திருட்டு

08/Apr/2021 10:48:22

ஈரோடு, ஏப்ரல்: ஈரோடு அருகே மின்சார வாரிய ஊழியரின் வீட்டில் ரூ.2.10 லட்சம் திருடு போன சம்பவம் குறித்து  போலீஸார் விசாரிக்கின்றனர்.

 ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகே உள்ள மண்கரடு, வித்யா நகரில் வசித்து வரும் சண்முகம்  மனைவி வேணி. சண்முகம் மின்சார வாரியத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் சண்முகம் காலையில் பணிக்கு சென்றுவிட்டார்.

வேணி தனது தாயார் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அருகிலிருந்தவர்கள் சண்முகம் மற்றும் வேணிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சண்முகம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்  காணாமல் போனது  தெரிய வந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி  போலீஸார்  சம்பவ இடத்திற்கு வந்த  விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பவம் நடந்த அன்று 2 மணிக்கு வீட்டின் முன்பு கார் வந்து நின்றதாகவும் சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து  போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Top