28/Jun/2021 06:09:59
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டபரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்
தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அடிக்கடி
உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு 30 நாள்கள்
பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தல்வர்
மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. கடந்த மே 28 -ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பரோல்
விடுப்புக்காக விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே கடந்த 19 -ஆம் தேதி பேரறிவாளனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
சிகிச்சை தொடர்ச்சியாக அளித்தால்தான் நன்மை என டாக்டர்கள் கூறுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.