logo
 ராகுல் காந்தி-பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தி-பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

24/Dec/2020 08:02:12

ஈரோடு, டிச: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி 2 கோடி கையெழுத்துடன் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில்  மாவட்ட காங்கிரஸ்  அலுவலகமான ஜவஹர் இல்லம் அருகே  ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன்,விவசாய பிரிவு ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி, ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ்,  மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முகமது அர்சத், கண்ணப்பன், கணகராஜ் ,அரவிந்த் ராஜ்,ஏ.சி.சாகுல் அமீது, ராஜாஜி புரம் சிவா,சூரம்பட்டி பிரகாஷ், கே.என்பாஷா, அன்பழகன் ஈரோடு மனித உரிமை துறை தலைவர் குமரேசன், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பாலாஜி,முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Top