logo
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தினர் பிரசாரம்

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தினர் பிரசாரம்

01/Apr/2021 01:04:58

புதுக்கோட்டை, மார்ச்: கோவில் பூசாரிகள் நல சங்கத்தின்கோரிக்கையை ஏற்று திமுக தேர்தல் அறிக்கையில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ 2000, ஓய்வூதியம் 4000 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இதன் காரணமாக  சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கோவில் பூசாரிகள் நலச்சங்கம் அறிவித்தது.


 இதையடுத்து மாநிலத்தலைவர்  மாநில தலைவர் பி. வாசு  தலைமையில் கிராமம் தோறும் பூசாரிகளை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்து வருகின்றனர். 


அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்கே.ஆர்.பெரியகருப்பனை  மாநில தலைவர்பி. வாசு  மாநில செயலாளர் , மாநில பொருளாளர் கே.சுந்தரம். எஸ்.சங்கர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் திருவள்ளுவர், மாவட்ட தலைவர் வினோத், மாவட்ட செயளாலர் அசோகன் ஆகியோர் சந்தித்து சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கி ஆதரவை தெரிவித்தனர். 



இதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா, திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ரகுபதி, ஆலங்குடி திமுக வேட்பாளர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோரை கோயில் பூசாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், திமுக கூட்டணி வெற்றி பெற தமிழகம் முழுவதும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிக்க செய்யும் வகையில் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் மாநிலத்தலைவர் பி. வாசு தெரிவித்தார்.


Top