logo
மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி பிரசாரம்

மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி பிரசாரம்

29/Mar/2021 09:54:17

ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி பிரசாரம் செய்தார்.

 தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய  பாஜக-அதிமுக  கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்  பாஜக  தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி பிரசாரம் செய்தார். 

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து நடிகையுமான கௌதமி மேலும் அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில்   தமிழகத்தில்  எண்ணற்ற பல நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு நேரடியாக கிடைத்துள்ளன. மத்தியிலும் மோடி அரசு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்தனர். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு அமைய வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்து பகுதிகளுக்கும்  கிடைத்துள்ளன. மொடக்குறிச்சியில் பெரிய அளவில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளன. 

விவசாயம் ஆரோக்கியமாக காணப்படுகிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6,000 ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வருகின்றனர். குடும்பத் தலைவிகளின் பாரத்தை குறைக்க ஆண்டுக்கு 6 சிலிண்டர், சோலார் அடுப்பு, குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய் என எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க.,அரசு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,கூட்டணி வேட்பாளரான சரஸ்வதிக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் கௌதமி.

Top