logo
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எம்எல்ஏ நிதியுதவி.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எம்எல்ஏ நிதியுதவி.

09/Dec/2020 07:11:36

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி புதன்கிழமை ஆறுதல் கூறினார்.
 ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் ஸ்வேதா(13). 8-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவி டிச.4-ம் தேதி வீட்டு மாடியின் அருகே சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Top