26/Mar/2021 10:49:46
ஈரோடு, மார்ச்: ஈரோடு கிழக்கு தொகுதியில் சாலை, அடிப்படை வசதிக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப் பாடுபடுவேன் என ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா வேட்பாளர் எம். யுவராஜா வாக்குறுதி அளித்தார்.
ஈரோடு கோட்டை, சம்பத் நகர், அண்ணா தியேட்டர் பகுதி, முனிசிபல் காலனி சாலை பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீடு, கடைகளில் தமாகா வேட்பாளர் எம்.யுவராஜா இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், சாலை விரிவாக்கம், தண்ணீர் வசதி, கூடுதல் மின் விளக்கு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வேன். இப்பகுதியில் அதிக நெசவாளர்கள் உள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் உயரும் வகையில், அ.தி.மு.க., அரசிடம் சலுகைகளை பெற்றுத்தர முயல்வேன்.
இலவச மின்சாரம் தொடரவும், அரசு திட்டங்களின் கீழ் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை போன்றவை உற்பத்திக்கான பணிகள் ஆண்டு முழுவதும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள் வேன்.இவற்றை நிறைவேற்ற, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.