logo
 கடந்த 2 ஆண்டுகளில்  6,000 பேருக்கு பணி வாய்ப்பளித்த ஆட்சி அதிமுக:மேற்கு தொகுதி வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேச்சு

கடந்த 2 ஆண்டுகளில் 6,000 பேருக்கு பணி வாய்ப்பளித்த ஆட்சி அதிமுக:மேற்கு தொகுதி வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேச்சு

22/Mar/2021 06:07:57

ஈரோடு,மார்ச்:  ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் நேற்று, மோளகவுண்டன்பாளையம், இரணியன் வீதி, சுந்தராபுரம், சோலார், காந்திபுரம், கல்யாண சுந்தரம் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வீடு, வீடாக  வாக்கு  சேகரித்தார்.

அங்கு வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் வாக்கு சேகரித்து பேசியதாவது:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, 5,430 இளைஞர்களுக்கு, 2.42 கோடி ரூபாய் உதவித்தொகையும், 535 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு, 1.06 கோடி ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கடந்த, 2018 முதல் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 98 முகாம் நடத்தப்பட்டு, தனியார் துறையில், 6,169 பேருக்கு பணி நியமனம் பெற்றுத்தந்துள்ளோம். தவிர தாட்கோ மூலம், சுய தொழில் துவங்க, 289 உறுப்பினர்களுக்கு, 2.45 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய, 8.19 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஊரக மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், 15.26 கோடி ரூபாய் மதிப்பில் கிராமப்புறங்களில் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 3,053 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் களுக்கு, 27.32 கோடி ரூபாய் அளவுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த, பத்தாாண்டுகளில், ஈரோடு மேற்கு தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

எனவே, வரும் சட்டசபை தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவேன என்றார்.இவரை ஆதரித்து, காளிங்கராயன் பாளையத்தில் பஞ்சாயத்து தலைர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில், வேட்பாளர் கே.வி.ராமலிங்கத்தின்  மகள் மீனா பிரீத்தி சிவகுமார் உள்ளிட்டோர்  வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Top