03/Jun/2021 08:08:28
ஈரோடு, ஜூன்: பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற நூதன திட்டத்தை பவானியில் பொதுநல அமைப்பு இளைஞர்கள் அறிமுகம் செய்து உணவு வழங்கினர்.
ஈரோடு மாவட்டம், பவானி அரசு மருத்துவமனை எதிரில் பவானி பொது நல அமைப்பு இளைஞர்கள்- பவானி ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர்
ஏற்பாட்டின்படி பசித்தால்
எடுத்துக்கொள்ளுங்கள் நூதனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு
மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் சண்முகம் கலந்துகொண்டு நிகழ்ச்சியை
துவக்கி வைத்தார்.
இதுகுறித்து அமைப்பினர் கூறுகையில், கொரானா காலத்தில் உணவின் தேவை அறிந்து ஏழைகள் பயன்பெறும் வகையில் 300 பேருக்கு இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. உணவை யாரும் வீணாக்க வேண்டாம்.
தங்களுக்குத்
தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள் என
அறிவுறுத்தினர். இந்த
நிகழ்ச்சியில் ஆண்டிக்குளம்
பஞ்சாயத்து தலைவர் பத்மா விசுவநாதன், மாவட்ட
திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி
உட்பட பலர் கலந்து கொண்டனர்.