logo
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.69 கோடி ரொக்கம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.69 கோடி ரொக்கம் பறிமுதல்

20/Mar/2021 11:14:23

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.69 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கிறது.தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், மேலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செயல்படும் பணங்களை  கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் கண்காணிப்பு குழுவினர் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில்  ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி வரும் பணத்தை பறிமுதல்  செய்து வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.38 லட்சத்து 89 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதியில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 730 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால்  ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 430 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மீதி 4 லட்சத்து 78 ஆயிரத்து 300 ரூபாய் இருப்பில் உள்ளது. 

மொடக்குறிச்சி தொகுதியில் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால்  1 லட்சத்து 80 ஆயிரம் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெருந்துறை பகுதியில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 410 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் 3 லட்சத்து 72 ஆயிரத்து 10 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 பவானி தொகுதியில் 11 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இதில் உரிய ஆவணம் காட்டியதால்  8 லட்சத்து 82 ஆயிரத்து 400 ரூபாய் உரியவ ரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தியூர் பகுதியில் 6 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய கவனம் காட்டியதால் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை திருப்பி ஒப்படைக்கப்பட்டது. 

கோபி தொகுதியில் 22 லட்சத்து 22 ஆயிரத்து 600 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ள்ளது. இதில் உரிய கவனம் காட்டியதால்  20 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் திரும்ப படைக்கப் பட்டுள்ளது. பவானிசாகர் தொகுதியில் 19 லட்சத்து 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணம் காட்டியதால் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 

இதுவரை மாவட்டம் முழுவதும் ரூ .1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 340 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.41 லட்சத்து66 ஆயிரத்து 840 ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 72 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் மீதம்  இருப்பில்உள்ளது.

Top