18/Mar/2021 10:01:58
ஈரோடு மார்ச்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கசி.திரவன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஏப்.6-இல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஈரோடு அருகே ரங்கம்பாளையம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கியது.
பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் 1, 2, 3 ஆகிய பிரிவினர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.