16/Mar/2021 05:56:57
ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகம் முழுவதும் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேல் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து அந்தியூர் வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பத்ரகாளியம்மன் கோயில் ரவுண்டானாவில் வேட்பாளர் சண்முகவேலை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மக்கள் நலன் காக்கும் அதிமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில், பெண்கள் பாதுகாப்பு விவசாய பாதுகாப்பு தொழில் முனைவோர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீனாட்சிசுந்தரம், பாஜக மாவட்ட செயலாளர் விஜயகுமார், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கோபால், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் தலைவர் சின்னத்தம்பி, கூட்டுறவு சங்கத் தலைவர் பாலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.