logo
இலங்கை  இனப்படுகொலை:பன்னாட்டு குழு விசாரிக்க வலியுறுத்தி தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை இனப்படுகொலை:பன்னாட்டு குழு விசாரிக்க வலியுறுத்தி தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

13/Mar/2021 05:17:48

ஈரோடு, மார்ச்: இலங்கை  அரசின் இனப்படுகொலையை பன்னாட்டு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை முன், தமிழ் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பொறுப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களை பன்னாட்டு விசாரணை குழு மூலம் விசாரிக்க வேண்டும். ஈழத்தமிழர்களை சுட்டு கொன்ற இலங்கை அரசு மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 

ஈழத்தில் ராணுவ மயம், சிங்கள மயம், பவுத்த மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெனீவாவில் தற்போது நடக்கும் ஐ.நா., சபை கூட்டத்தில் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இக்கோரிக்கையை மத்திய அரசு பிற நாடுகளிடம் அழுத்தம் தர வேண்டும், என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, பல்வேறு அமைப்பை சேர்ந்த ரத்தினசாமி, ஜாபர், குமரகுருபரன், சித்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.

Top