logo
ஈரோடு மாவட்டத்தில் அதிமுக - திமுக 4 தொகுதிகளில் நேரடி போட்டி

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக - திமுக 4 தொகுதிகளில் நேரடி போட்டி

12/Mar/2021 09:47:30

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது

ஈரோடு மாவட்டத்திலுல்ள 8  சட்டமன்ற தொகுதிகளில்  ஈரோடு மேற்கு, கோபி, பவானி, அந்தியூர், பவானி சாகர், பெருந்துறை ஆகிய 6 தொகுதிகளில்  அதிமுக  போட்டியிடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், மொடக்குறிச்சி தொகுதி பாஜகவுக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

 இதேபோல் திமுகவைப் பொறுத்தவரை ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி ,அந்தியூர், கோபி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது.  காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியும், பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பெருந்துறை தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட் டுள்ளது. இதில்  அதிமுகவும் ,திமுகவும் ஈரோடு மேற்கு, பவானி, கோபி, அந்தியூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றன.

 ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் நேரடியாக களம் இறங்குகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

பவானிசாகர் தனித் தொகுதியில் அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெருந்துறையில் அதிமுகவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும்  பலப்பரீட்சை நடத்துகின்றன. மொடக்குறிச்சி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும், திமுக-வும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Top