logo
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 685 பேர் பாதிப்பு: குணமடைந்தேர் 543-பலி 5 பேர் : .சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 685 பேர் பாதிப்பு: குணமடைந்தேர் 543-பலி 5 பேர் : .சுகாதாரத்துறை தகவல்

12/Mar/2021 09:01:11

சென்னை: தமிழகத்தில் மேலும் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 57 ஆயிரத்து 602 (8,57,602) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,  தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 

 சுகாதாரத்துறை  வெளியிட்ட அறிக்கை:   தமிழகத்தில் மேலும் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,57,602 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 543 பேர் குணமடைந் துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,40,723 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,535 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 2; தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 292 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,38,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,80,86,877 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 65,945 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் தற்போது 4,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,18,136 பேர் ஆண்கள், நேற்று மட்டும் 406 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,39,431 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 279 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188. வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம்-1, மேற்கு வங்கம்-4.  வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஊழியருக்கு கொரோனா: கடைக்கு சுகாதாரத்துறையினர் சீல்; சக ஊழியர்களுக்கும் பரிசோதனை

 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஊழியருக்கு கொரோனா தொற்று ற்பட்டுள்ளதை தொடர்ந்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி இயக்கப்படுகிறது. 50 ஆயிரத்துக் கும் மேலான பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். 

இங்கு, பயணிகளுக்கு தேவையான சாப்பாடு, டீ, காபி, தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், ரயில் நிலையத்தில் அடையார் ஆனந்தபவன் ஓட்டலும் அமைந்துள்ளது. அந்த ஓட்டலில் பணிபுரியும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் முடிவு நேற்று முன்தினம் வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த ஓட்டலில் இருந்து மற்ற ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு தொற்று பரவுவதை தடுக்க, அந்த ஓட்டலை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். 

மேலும், கடையில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று அனைத்து ஊழியர்களும் கொரோனா சோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவுக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், மற்றொரு கடையில் பணிபுரிந்த ஊழியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Top