logo
பெருந்துறையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் கருப்பணன் பிரசாரம்

பெருந்துறையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் கருப்பணன் பிரசாரம்

11/Mar/2021 06:05:16

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுந் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக

சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணணன் பிரசாரம் மேற்கொண்டார்.


ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை சட்டமன்றத்தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஜே.கே. என்கின்ற ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டா.ர் சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை பெருந்துறை வந்த அவருக்கு விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் அதிமுகவுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில்  போட்டியிடும் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரித்தார்

அப்போது  அவர் பேசியதாவது: அதிமுக வாக்குகளையும் தவிர மாற்று கட்சி வாக்குகளை நாம் கைப்பற்ற வேண்டும் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி மற்றும் வருடந்தோறும் 6 சிலிண்டர், குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாய் உதவிதொகை என்ற அறிவிப்பு  பெருவாரியான மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. கண்டிப்பாக அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என மக்கள் நம்புவதாகவும் இதன் மூலம் தொடர்ந்து  மூன்றாவது முறையாக  எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என குறிப்பிட்டார்.

 

Top