logo
ஏப். 1 முதல் இணைய வழியில் மின் இணைப்புக்கு  பெயா் மாற்றம் செய்யலாம்

ஏப். 1 முதல் இணைய வழியில் மின் இணைப்புக்கு பெயா் மாற்றம் செய்யலாம்

08/Feb/2021 03:52:18

சென்னை: மின் இணைப்புப் பெயா் மாற்றம் செய்வதற்கு ஏப்.1-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் இணைய முகப்பு வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகா்வோா், மின் இணைப்புப் பெயா் மாற்றம் விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கு நிா்வாகத்தின் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

எனவே, விற்பனை, பகிா்ந்தளித்தல், ஒப்படைப்பு, பரிசு வழங்குதல், உரிமையாளா் இறப்பு போன்ற காரணங்களால் சம்பந்தப்பட்ட இணைப்புகளின் பெயரை மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிப்போா், பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, தற்போதைய உரிமையாளா் பெயா், இணைப்பு எண் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

இத்துடன் உரிய கட்டணம் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் பெற்றதும், சம்பந்தப் பட்ட பிரிவு அலுவலக அதிகாரியே பெயா் மாற்றம் செய்து அன்றைய நாளிலேயே  நடவடிக்கை எடுக்கலாம். தவறுதலான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால் விண்ணப்பதாரா் களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

அதேநேரம், அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் கட்டாயம் பெயா் மாற்றம் செய்து சான்று வழங்க வேண்டும். இந்த நடைமுறை தமிழகம் முழுவதும்  பிப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும்  தெரிவித்தனா். 


Top