logo
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-  கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் நிறுத்தம்

11/Mar/2021 05:50:02

ஈரோடு, மார்ச்:ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. 

அதே போல் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை பவானிசாகர் அணைக்கு  திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.34 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,389 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்காக 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.

Top