07/Mar/2021 08:51:08
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை, திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் மாசிபெருந் திருவிழாவையொட்டி பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் மாசிபெருந் திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கோயிலுக்கு பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகுகுத்தியும் யாத்திரையாக கோயிலுக்குச் சென்று கோயில் வாசலில் பொங்கலிட்டும் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நடந்து சென்று அம்மனை வழிபட்டனர்.
இதையொட்டி, பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோயிலின் அருகில் அமைக்கப்பட்ட பந்தலில் அன்னதானம் நடைபெற்றது. இதில், சங்கத்தலைவர் டாக்டர் தனசேகரன், செயலாளர் செந்தில் மற்றும் கவிஞர் தங்கம்மூர்த்தி, வீரன் வேலுசாமி, சேகர், துரைமணி, பாஸ்கர் உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர். இதைப் போல நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் மூலம் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது.