04/Mar/2021 10:16:17
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 23 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திருப்பூர், கோவை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் மாவட்டத்தில் பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர்களை பணியிடம் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, மேற்கு மண்டல ஐ.ஜி, தினகரன், ஈரோடு மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கொண்டு பணியாற்றி வரும் எஸ்.ஐ.,க்கள் மற்றும் 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் என 23பேரை கோவை, திருப்பூர் மாநகர காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தமிழ் செல்வி, அந்தியூர் பிரபு, கோபி போலீஸ் ஸ்டேஷன் பன்னீர் செல்வம், ஈரோடு ஆயுதப்படை குருமூர்த்தி, ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன் துரைசாமி, சூரம்பட்டி ஜான்சன்பால், கருங்கல்பாளையம் கிருஷ்ண மூர்த்தி, ஈரோடு தாலுகா ராஜ சுலோசனா, உமாராணி ஆகியோர் கோவை மாநகர போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பெருந்துறை உமாபதி, சென்னிமலை துரைசாமி, சென்னிமலை ஜீவானந்தம், சென்னிமலை வெங்கடாசலம், காஞ்சிகோவில் துரைசாமி, வெள்ளோடு கிருஷ்ணராஜ், வெள்ளோடு துரைசாமி, அரச்சலுார் தமிழ் செல்வன், தங்கவேல், பவானி சண்முகம், சரஸ்வதி சம்பத் குமார், கோபால்சாமி, சுகுமார் ஆகியோர் திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.