04/Mar/2021 01:26:44
கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை. அதிமுக தான் கெஞ்சுகிறது என்று அக்கட்சியின் நிர்வாகி எல்.கே.சுதீஷ் கூறிய கருத்தால் அதிமுக கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது..
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேமுதிக உடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை ஆரணியில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை. அதிமுக தான் கெஞ்சுகிறது என்று குறிப்பிட்டாராம்.
மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவுக்டன் அதிமுக கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அக்கட்சியே இருந்திருக்காது. மாநிலங்களவை இடத்திற்காக நாம் ஆசைப்படவில்லை என்ற அவரது பேச்சு அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது