logo
நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா அறிவிப்பு

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா அறிவிப்பு

04/Mar/2021 12:33:17

சென்னை: இது குறித்து அவர் புதன்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கை:  நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன்.ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன். 

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் சகோதரியாக இருந்தேன், ஜெயலலிதா மறைந்த பிறகும் அப்படியே இருப்பேன்.ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.நம் பொது எதிரியான திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

அதிமுகவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்பதால் அரசியலில் இருந்து சசிகலா விலகியுள்ளார்: டிடிவி தினகரன் கருத்து: அதிமுகவில் இணைந்து இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என்பதால்  சசிகலா அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்துவிட்டார். அரசியலில் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று சசிகலா முடிவு செய்துவிட்டார் .சசிகலாவுக்கு இதில் எந்த பின்னடைவும் இல்லை.எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்

Top