logo
திருமயம் அருகே பதுக்கி வைத்திருந்த வெடி பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது

திருமயம் அருகே பதுக்கி வைத்திருந்த வெடி பொருள்கள் பறிமுதல் - ஒருவர் கைது

01/Mar/2021 01:01:38

புதுக்கோட்டை-மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கண்ணனிப்பட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கல்குவாரி பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் வெடிபொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து, இடத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 திருமயம் அருகே கண்ணனிப்பட்டியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருமயம் வட்டாட்சியர் சுரேஷ், காவல் ஆய்வாளர்  தமிழரசி,கியூ. பிரிவு போலீசார்  ஞாயிற்றுக்கிழமை  இரவு   கண்ணனிப்பட்டில கிராமத்துக்குச் சென்று  அங்குள்ள கிடங்கில் ஆய்வு செய்தனர். 

அதில்  பாறைகளை வெடிக்க பயன்படுத்தப்படும்  ஜெலட்டின் குச்சிகள் 18 பெட்டிகள்,2 டெட்டனேட்டர் பெட்டிகள்,வெடி உப்பு, திரி போன்றவை வைக்கப்பட்டிருந்தன.

 அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த கிடங்கை  நிர்வகித்த இலுப்பூர் தாலுகா, கூவனூர் அந்தோணிமுத்து(47) என்பவரை கைது  செய்தனர். பின்னர் வருவாய் அலுவலர்கள் அந்த கிடங்கைப் பூட்டி சீல் வைத்தனர். கைது செய்யப்பட்ட அந்தோணிமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி,பொன்னமராவதி டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் ஆகியோர் வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

Top