logo
உலக அறிவியல் தினத்தையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆயிரம் மரங்களைநடவு செய்த இளைஞர்கள்

உலக அறிவியல் தினத்தையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆயிரம் மரங்களைநடவு செய்த இளைஞர்கள்

28/Feb/2021 06:38:43

ஈரோடு பிப்; ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் சில்லாமடை பகுதியில் உலக அறிவியல் தினத்தையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆயிரம் மரங்களை கிராமத்து இளைஞர்கள்  அந்த ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடவு செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி சர் சி வி இராமன் இராமன் விளைவு கண்டுபிடித்ததை நினைகூரும் விதமாக பிப்ரவரி 28-ஆம் தேதி ஆண்டு தோறும் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புவி வெப்பமயமாவதை தடுக்கவும் பல்வேறு நிகழ்வுகளை பலர் மேற்கொண்டு வருகின் றனர். 

அதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் ஊராட்சி சில்லாமடை என்னும் கிராமத்தில் மின் போதி அறக்கட்டளையுடன் இணைந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கிராம பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கிராமம் முழுவதும் ஆயிரம் மரங்களை நடவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு கிராம மக்களின் ஒத்துழைப்புடன் கிராமப்பகுதிகள் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இதில் மகிழம், வேம்பு, வில்வம் இயல்வாகை கருங்காலி இலுப்பை போன்ற மருத்துவ குணமுள்ள ஆயிரம் மரங்களை  நடவு செய்து   பாதுகாப்பு வேலி அமைத்தனர். மேலும் ஒவ்வொரு மரங்களின் குணங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்து கிராம மக்களுக்கு விளக்கமளித்ததுடன் ஒரு மரத்தை வளர்த்து பாராமரிக்க  மரத்துக்கு இரண்டு  பராமரிப்பாளர்களை நியமித்துள்னர். அவர்கள் மரங்களை வளர்த்து பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த மரம் நடும் முயற்சியில் மின் போதி அறக்கட்டளையுடன் இணைந்து தன்னார்வலர்கள் செல்வராஜ், சண்முகம் - வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து கிளார்க், கௌதம் மற்றும் முன்னாள் யூனியன் உறுப்பினர் ஞானசுந்தரம் ஆகியோர்கள் கிராம  பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில்  மரங்களை நடவு செய்த நிகழ்வு  அப்பகுதி இளைஞர்களையும் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

Top