25/Feb/2021 07:50:06
புதுக்கோட்டை, பிப்: தன்னிடம் பாலியல் அத்துமீறலில் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நடந்து கொண்டார் என தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் ஒரு பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்ததை தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது பற்றிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்கள். இதனை கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த அறவழிப் போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் அவர்களின் மீது இந்த குற்ற வழக்கை விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்ததை புதுக்கோட்டை ஆம் ஆத்மி கட்சி வரவேற்கிறது. கூடுதலாக வேண்டுகோளை ஒன்றையும் வைக்கின்றோம்.இவரால் பாதிக்கப்பட்டது இந்தப் பெண் அதிகாரி மட்டுமா இல்லை மேலும் யாரேனும் பெண் அதிகாரிகள் உள்ளனரா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை ஆம் ஆத்மி கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
மேலும், தமிழக பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக டிஜிபி . திரிபாதி மற்றும் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.