logo
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு 600 காளைகள் பங்கேற்பு

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு 600 காளைகள் பங்கேற்பு

25/Feb/2021 12:47:05

புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் அருகேயுள்ள கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தில் புதன்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 600 காளைகள் பங்கேற்றன.

கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி வாடி வாசல் அமைக்கப்பட்டு, இரு புறங்களிலும் பாதுகாப்பு கட்டைகளுடன் மாடு பிடி களமும் அமைக்கப்பட்டிருந்தது. இதில், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  600 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. இதே போல, மாடு பிடி வீரர்கள் 300 பேர் களமிரங்கி காளைகளை அடக்க முயன்றனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக்காண சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். காளைகளை அடக்க முயன்ற ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதைத்தவிர உயிர்ச்சேதம் எதுவுமில்லை என்பதை அனைவரையும் நிம்மதியடையச் செய்தது.

Top