logo
மறைந்த முதல்வர்ஜெயலலிதாவின் 73 -ஆவது பிறந்தநாள்:  புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

மறைந்த முதல்வர்ஜெயலலிதாவின் 73 -ஆவது பிறந்தநாள்: புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

24/Feb/2021 11:35:21

புதுக்கோட்டை, பிப்: மறைந்த முதல்வர்ஜெயலலிதாவின் 73 -ஆவது பிறந்தநாள்:  புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆஞ்சநேயர் கோயிலில்  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து , பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் தொழிற்சங்கம் பணிமனை முன்பு உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

பின்னர் அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி  ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்ப்பட்டது.  அதனைத் தொடர்ந்து  மீண்டும் அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவர சபதமேற்போம் என்று உறுதி ஏற்றுக்கொண்டனர்.

 மண்டல செயலாளர் செபஸ்தியான் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான், ஆர். நெடுஞ்செழியன், நகரச் செயலாளர் க. பாஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் வி. ராமசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அரசு வழக்குரைஞர் எஸ். ராமநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம்  வழங்கப்பட்டது.

Top