logo
கூரை வீடுகளை மாற்றுவதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் வழங்க  முதல்வர் ஆணையிட்டுள்ளார்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கூரை வீடுகளை மாற்றுவதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

20/Feb/2021 08:14:42

ஈரோடு, பிப்: கூரை வீடுகளை மாற்றுவதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் வழங்க  முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்றார் அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளைத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று 1500 பயனாளிகளுக்கு நிரத்தர வீட்டுமனை பட்டாக்களை வழங்கியபின் பேசியதாவது:

தேர்தல் வருவதற்கு முன்பே விவசாய கடன் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தானே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது நமக்கு என்ன என்று நீங்கள் கேட்கக்கூடும் கவலைப்படத் தேவையில்லை மகளிருக்கும் சலுகைகள் கிடைக்கும்.

 தமிழக வரலாற்றில் இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில்  மக்களின் கனவுகளை நிறைவேற்ற ஒரு அரசு என்ன செய்யவேண்டுமோஅதை சீரோடும் சிறப்போடும் செய்துவருகிறது. என்றைக்கு  புரட்சித்தலைவர் மதுரைவீரன் அவதாரம் எடுத்தாரோ அன்று முதல் இன்று வரை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளீர்கள். அதற்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் ஈடில்லை.

 

 கூரை வீடுகளை மாற்றுவதற்கு இ அடுத்த  10 நாள்களில்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

 அதனை தொடர்ந்து விழா மேடையில் ஒரு சிலக்கு மட்டும் வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் பின்னர் கீழே அமர்ந்திருந்த அனைவருக்கும் அவர்களது இருக்கைக்கே சென்று வழங்கினார். இவ்விழாவில் கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Top