logo
ஆந்திர மாநிலம், சித்தூர்  அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 14 பேர் பலி

14/Feb/2021 06:46:23


ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் பெல்லூர்த்தி மண்டலத்திலுள்ள மாதாபுரம் அருகே அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் சித்தூர் மாவட்டம் ,மதனப்பள்ளியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்  அருகே உள்ள  ஹஜ்மீருக்கு டெம்போ ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த எட்டு பெண்கள், ஒரு குழந்தை, ஐந்து ஆண்கள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


மதனப்பள்ளியை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் ஹஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த டெம்போ வேன் கர்னூல் மாவட்டம், மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி நொறுங்கிய வேனில் பயணம் செய்தவர்களில் 8 ஆண்கள், ஒரு குழந்தை ,ஐந்து பெண்கள் என 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 வாகனங்களுக்கு இடையே சிக்கி மரணம் அடைந்தவர்கள் உடல்களை கிரேன் உதவியுடன் மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து பற்றிய வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 


Top