logo
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2வது நாளாக 51.4மி.மீட்டர் மழை  பதிவானது

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2வது நாளாக 51.4மி.மீட்டர் மழை பதிவானது

18/Nov/2020 10:37:06

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில், மாவட்டத்தில் நேற்று முன்தினமும் பரவலாக மழை பெய்தது. கொடுமுடியில் 2வது நாளாக அதிகபட்சமாக 51.4மில்லி மீட்டர் மழை பெய்தது.. 

இதேபோல், மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு: ஈரோடு-7, பெருந்துறை-5, கோபி-3.4, தாளவாடி-6, சத்தி-3, பவானிசாகர்-7.4, பவானி-3.8, கொடுமுடி-51.4, நம்பியூர்-6, சென்னிமலை-19, மொடக்குறிச்சி-10, கவுந்தப்பாடி-9, எலந்தகுட்டை மேடு-5, அம்மாபேட்டை-4.4, கொடிவேரி-5.2, குண்டேரிப்பள்ளம்-20, வரட்டுப்பள்ளம்-12.4 என மாவட்டத்தில் 187.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 


         

Top