logo
தீயணைப்புத்துறை சார்பில்  உயிர் நீத்த வீரர்களுக்கு  வீரவணக்கம்

தீயணைப்புத்துறை சார்பில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்

14/Apr/2021 10:47:01

புதுக்கோட்டை, ஏப்: தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மீட்புப் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் புதன்கிழமை  நடைபெற்றது.

கடந்த 1944 -இல் மும்பை விக்டோரியா துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலில் நேரிட்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள் 66 பேர் எதிர்பாராத விதமாக அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். அந்த நாளை  நீத்தார் நினைவு நாளாக  ஆண்டு தோறும் தீயணைப்புத் துறையினர் கடைபிடித்து வருகின்றனர். மேலும் நாடு முழுதும் இன்று வரை தீயணைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த வீரர்களுக்கும் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து இதே நாளில் அனுசரிக்கப்படுகிறது.


அதன்படி, புதுக்கோட்டை தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், அங்குள்ள தியாகிகள் நினைவுத்தூணுக்து  மாவட்ட தீயணைப்பு அலுவலர்,  இ.பானுபிரியா  தலைமையில்,மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ப.கார்த்திகேயன் மற்றும் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதே போல மாவட்டம் முழுதும் உள்ள 12 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தடுப்புக்குழுவினர்  சார்பில்  பணியின் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி  இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Top