logo
அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்ட வனத்துறையினர்

அந்தியூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்ட வனத்துறையினர்

12/Feb/2021 07:35:26

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் கொண்டயம்பாளையம் பகுதியில் காட்டுப்பன்றி ஒன்று சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளதாக அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அத்தாணி பிரிவு வனவர் பிரவீன் பாரதி வனக்காப்பாளர் கேசவமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பின்பு இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையிலான தீயணைப்புத்துறை அதிகாரிகள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டனர் பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் காட்டு பன்றியை பத்திரமாக கொம்புதூக்கி மாரியம்மன் கோயில் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்

Top