logo
நெற்றியில் நாமம் இட்டு  சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்  25 பேர் கைது

நெற்றியில் நாமம் இட்டு சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 25 பேர் கைது

07/Feb/2021 04:00:20

ஈரோடு, பிப்:ஈரோட்டில் நெற்றியில் நாமம் இட்டு  சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்  25 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊர்ப்புற நூலகர்கள், எம் ஆர் பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஒவ்வொரு நாளும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி  6-ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் மயில்சாமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  

ஆர்ப்பாட்டத்தில், அரசு ஆண் ஊழியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெற்றியில் நாமத்தை அணிந்து கொண்டு  பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகம் முன்பு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள், 21  ஆண்கள்  என 35  பேரை கைது செய்தனர்.

Top