logo
ஈரோடு மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகளின்  வருகை குறைவால் விற்பனை சரிவு

ஈரோடு மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைவால் விற்பனை சரிவு

04/Feb/2021 05:59:43

ஈரோடு, பிப்:  ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், மாடுகள் விற்பனை சரிவடைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வியாழக்கிழமைதோறும் மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள், சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் வரத்தாகும். இந்த மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், வி.ாழக்கிழமை கூடிய மாட்டு சந்தையில் கடந்த வாரத்தை போலவே பசு-500, எருமை-250, கன்று-100 என 850 மாடுகள் வரத்தானது.

 இதில், பசு மாடு ரூ.30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல்ரூ.45ஆயிரம் வரையும், கன்று ரூ.10ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தைக்கு குறைவான எண்ணிக்கையிலேயே வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதனால், சந்தையில் 70சதவீதம் அளவே மாடுகள் விற்பனையானதால், மாட்டு வியாபாரிகள் கவலையடைந்ததாக  மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Top