logo
 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

02/Feb/2021 08:51:29

ஈரோடு பிப்: ஈரோட்டில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் காளைமாடு சிலை அருகில் மாவட்ட தலைவர் சங்கரன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் கிராம ஊழியர் வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.

அனைத்து வகை ஊழியர்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ. 3 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மூன்று மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Top