logo
நீர் வரத்தை காட்டிலும் திறப்பு அதிகம்.. குறைந்து வரும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம்

நீர் வரத்தை காட்டிலும் திறப்பு அதிகம்.. குறைந்து வரும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம்

31/Jan/2021 06:43:19

ஈரோடு, ஜன: ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.12 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு  261 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 400 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 1800 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Top