logo
காந்திஜி  நினைவு தினம்- தியாகிகள் தினம்: அகில இந்திய மகாத்மா காந்தி பேரவையின் சார்பில் மரியாதை

காந்திஜி நினைவு தினம்- தியாகிகள் தினம்: அகில இந்திய மகாத்மா காந்தி பேரவையின் சார்பில் மரியாதை

30/Jan/2021 06:29:32

புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் சார்பில் நிறுவனத் தலைவர்  முனைவர் வைர.ந தினகரன்  தலைமையில் காந்தியடிகளின் நினைவு தினம் மற்றும் தியாகிகள் .தினம் ஜன.30-இல் அனுசரிக்கப்பட்டது . இதை முன்னிட்டு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள காந்திப் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவையின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


 தொடர்ந்து தியாகத்தைப் போற்றுவோம். தீமைகளை அகற்றுவோம்  என்ற நோக்கில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்தும், தீண்டாமை ஒழிப்பு,மதுஒழிப்பு குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டன. அகிலஇந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனர் முனைவர் வைர.ந.தினகரன்    தலைமை ஏற்று காந்தி சிலைக்கு மாலையணிவித்தார்.

பின்னர் நடந்த உறுதிமொழி  பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் கவிஞர் நிலவை பழனியப்பன் வரவேற்புரையாற்றினார் பேரவை மாவட்ட அமைப்பாளர்  மருத்துவர் ராம மூர்த்தி,பேராசிரியர்கள் விஸ்வநாதன், பகுந்தறிவாளன், மரியசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பேரவை இளைஞரணி அமைப்பாளர் கவிஞர் முருகபாரதி உறுதி மொழி ஏற்க செய்தார்.  பேரவை நிர்வாகிகள் பேராசிரியர்கள் மாரியப்பன், நாராயணன், மாரிமுத்து ,புலவர் ஜெயா, நமச்சிவாயம், பேரவை மாவட்ட இளைஞரணி அமைப்பளர் மாணிக்கம், முனுசாமி,முருகன், ஜனார்த்தனன் உள்ளிட்ட காந்திப் பேரவையினர், மாமன்னர் கல்லூரி தேசிய மாணவர்  படையினர் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.காந்திப் பேரவை தலைமை நிலைய செயலாளர் மு.மோகனபிரியா நன்றி கூறினார். 


                                                   

        


Top